April 13, 2008

அனுமதியும், ஆதரவும் . . .


பதிவர்களுக்கு வணக்கம்,
பதிவு பட்டறை அறிமுகமும், பதிவுகள் படிப்பதும் எனக்கு கடந்த ஓராண்டுக்கு முன்னரே அறிமுகமானது. பிறர் பதிவுகளை படிப்பதும், அதனை மனதுக்குள் மதிப்பிட்டுக்கொள்வதும் தான் என் வழக்கம். தேவைப்பட்டால் இந்த கருத்து என் நெருங்கிய நண்பர்களுடான விவாதத்துக்கு வரும். ஆனால், எந்த பதிவுக்கும் இதுவரை பின்னூட்டம் இடக்கூட நான் நினைத்ததில்லை.ஆரம்பம் முதலே பிறர் மனதை காயப்படுத்தாமல் இருப்பது நல்லது என்பது என் எண்ணம். இதனால், கூடுமானவரை நேரடி விமர்சனத்தில் இறங்கியதில்லை. மிக நெருங்கிய சிலரிடம் மட்டும் எனக்காக நான் விதித்துக்கொண்ட இந்த விதிகள் மீறப்பட்டதாக நினைவு. அதனால், எனக்கு ஏற்பட்ட இழப்புகள் கூட, இதுவரை நேரடி விமர்சனத்தை தவிர்ப்பதற்கு காரணமாக இருக்கலாம்.எனக்காக நான் விதித்துக் கொண்ட இந்த விதிகளை மீறி, நடக்க கற்றுக்கொள்ள முயலும் குழந்தை போல ‘‘மெல்லத் தெரிந்து சொல்’’ எனும் இந்த வலைப்பதிவு மூலம் விமர்சனத்தையும், தற்போதைய நடப்பையும் எடுத்துரைத்து உங்களுடன் விவாதிக்க விரும்புகிறேன்.நடைபயலும் குழந்தை என்பதால், தடுமாறி விழவும் வாய்ப்புண்டு. தடுமாறி விழுந்தால் கரம் கொடுக்கவும், தயங்காமல் நடந்தாமல் தட்டி பாராட்டவும் உங்கள் கைகள் எனக்கு அவசியம். ஒரு சமயம் தடுமாறி விழும் எனக்கு உங்கள் கரம் கிடைக்காவிடில், வேறு ஏதாவது பிடிப்புடன் எழுந்து நடப்பது மட்டும் நிச்சயம்.
நன்றி.

1 comment:

கபீஷ் said...

வாங்க! வாங்க!! word verification ஐ எடுத்துட்டா கமெண்ட் பண்ண வசதியாயிருக்கும்