May 11, 2009

வாக்களியுங்கள் காங்கிரசுக்கு!

உங்கள் சகோதரரை கொல்லும்  
மனம் உள்ளதா உங்களுக்கு?  
உங்களின் சகோதரர்களின் குழந்தைகள்  
அனதைகள் ஆக விருப்பமா உங்களுக்கு? 
உங்கள் சகோதரிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை 
எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் ஏற்றுக்கொள்வீர்களோ நீங்கள்?  
குண்டு விழுந்தும், உணவு இல்லாமலும் 
உறவினர்கள் சாக விருப்பமா உங்களுக்கு? 
உங்கள் குடும்பத்தார் மீது தாக்குதல் நடத்தி சித்ரவதை செய்யும் 
கொடியவனை கண்டு காணாமல் இருப்பீரோ நீங்கள்?  
தாக்குதல் நடத்த ஆயுதம் தருபவனுக்கு 
ஒட்டி உறவாடி ஆதரவு தருவீர்களா?  
இவற்றுக்கெல்லாம் உங்களின் பதில் ஆம் என்றால் 
கிரிக்கெட் பார்த்து சந்தோஷப்படுங்கள்
திரைப்படங்கள் மூலம் மகிழ்ச்சியை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்
இதோ தேர்தல் வந்து விட்டது கவலைப்படாமல் வாக்களியுங்கள்  
காங்கிரசுக்கும், தி.மு.க.வுக்கும்.

2 comments:

Anonymous said...

தேர்தலுக்கு பின் காங்கிரஸ் - அ.தி.மு.க. உறுதி உங்களுக்கு ஆப்பும் உறுதி

ச.ஜெ.ரவி said...

வருகைக்கு நன்றி பெயரிலி!
இந்த தேர்தலில் காங்கிரசுக்கு விழும் அடி
இனி யாரையும் ஈழத்தமிழர்களுக்கு
எதிராக யோசிக்க வைக்காது.
எனவே உங்களை போன்றோருக்கு தான்
நீங்கள் சொன்ன ஆப்பு . . .