‘நம் சக்தியை, எதிரிக்கு எதிராக மட்டும் தான் பயன்படுத்தணும்’ பேராண்மை படத்தில் கதாநாயகன் பேசும் வசனமாக இதை எழுதியிருப்பார் இயக்குனர் சனநாதன். இப்போது ஒட்டுமொத்த ஊடகங்களும், சனநாதனை எதிரியாக பார்க்கிறதோ என்னவோ. தனது சக்திகளை திரட்டி எதிர்க்க துவங்கியுள்ளன.
சாதி எதிர்ப்பு அரசியல், அதிகார வர்க்கத்தின் எதிர்ப்பு ஆகியவற்றை பிரதானமாக முன்வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் குறித்த விமர்சனத்தில் எந்த ஊடகங்களும், அதனை குறிப்பிடாமல் (சாதியிய, அதிகார வர்க்க கண்ணோட்டத்தில்) இந்த படத்தை ஒரு தேசபக்தி திரைப்படமாக சித்தரித்து வருகின்றன. உண்மையில் ‘பேராண்மை’ தேச பக்தி படமா?.
October 26, 2009
பேராண்மையும், ஊடகங்களின் பார்வையும்
‘நம் சக்தியை, எதிரிக்கு எதிராக மட்டும் தான் பயன்படுத்தணும்’ பேராண்மை படத்தில் கதாநாயகன் பேசும் வசனமாக இதை எழுதியிருப்பார் இயக்குனர் சனநாதன். இப்போது ஒட்டுமொத்த ஊடகங்களும், சனநாதனை எதிரியாக பார்க்கிறதோ என்னவோ. தனது சக்திகளை திரட்டி எதிர்க்க துவங்கியுள்ளன.
சாதி எதிர்ப்பு அரசியல், அதிகார வர்க்கத்தின் எதிர்ப்பு ஆகியவற்றை பிரதானமாக முன்வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் குறித்த விமர்சனத்தில் எந்த ஊடகங்களும், அதனை குறிப்பிடாமல் (சாதியிய, அதிகார வர்க்க கண்ணோட்டத்தில்) இந்த படத்தை ஒரு தேசபக்தி திரைப்படமாக சித்தரித்து வருகின்றன. உண்மையில் ‘பேராண்மை’ தேச பக்தி படமா?.
October 22, 2009
கருணாநிதியை நம்புவோருக்கு சில கேள்விகள்
October 14, 2009
தினமலர் ஊழியருக்கு சில கேள்விகள்
October 12, 2009
தாலி தேவையா?
03. ‘தாலி என்பது பெண்களின் உயிர். கணவர் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடையாளம்’ என்கிறீர்கள். அது சரி. கணவன் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு என்ன அடையாளம்? தாலி இல்லாவிட்டால் உங்களால் கணவனுக்கு நம்பிக்கையுடன் இருக்க முடியாதா?
September 23, 2009
‘சீமானுடன் நான்’
‘என்னை பொறுத்தவரையில், ஒரு மனிதர் யாராக இருந்தாலும், அவர் தமிழ் பற்று உடையவர் என்று கருதினால், அவருக்கு நான் அடிமையே ஆவேன்’. பெரியாரின் இந்த வார்த்தைகள் போதும், சீமானுடனான எனது இந்த சந்திப்பின் அர்த்தத்தை புரிய வைக்க. September 18, 2009
உன்னைப்போல் ஒருவன் (திரை விமர்சனம்)
August 21, 2009
கந்த............சா......மி....
July 28, 2009
கோவை சாதி கட்சியினருக்கு . . .
‘‘ஒரு சிலர் மட்டும் சுகம் அனுபவிப்பதற்கென்றும், மற்ற பலர் வேதனைபடுவதற்கென்றுமே அமைக்கப்பட்ட சாதிமுறைகள், இந்நாட்டை விட்டு அகலும் வரை நமக்குள்ள கொடுமைகள் நீங்காதென்பது திண்ணம்’’. சாதி வேறுபாடுகளை கடுமையாக எதிர்த்த புரட்சிகாரர் ‘தந்தை பெரியார்’ உதிர்த்த சொற்கள் இவை.July 10, 2009
தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞரின் துரோகங்கள்!
July 8, 2009
தோற்பது மட்டுமே!
இருவரில் கோபப்படுவது நீயோ, நானோ சமாதானப்படுத்துவது மட்டும் எனது செயலாக இருந்தது
சிரிப்பு, அழுகை, கோபம், எரிச்சல் என நம் எண்ண பகிர்தலின் வழிகள் அனைத்துக்கும் காரணமாக இருந்தது நீ தான் என்றாலும் விளைவுகள் மட்டும் என்னை சார்ந்தே அமைந்திருந்தது. உன்னுடனான ஏழு ஆண்டு பழக்கத்தில் குற்றங்கள் செய்தாலும் செய்யாவிட்டாலும் மன்னிப்பு கேட்பது என் கடமையாகவே மாறிப்போனது.
செயல்கள் எல்லாம் உனதாயிருந்ததால் விளைவுகளாக மட்டுமே இருக்க விரும்பினேன் நான்.
உன்னை விட்டு பிரிந்த பின்னர் இதுவே பிரச்னையாய் போனது எனக்கு.
உன் நினைவுகளை அழித்தல்; உன்னை நினைக்காமல் இருத்தல் என எந்த செயலையும் என்னால் செய்ய இயலவில்லை.
மாறாக உன் நினைவுகள் என்னுள் ஏராளமான விளைவுகளை ஏற்படுத்தின.
கடந்த மூன்று ஆண்டுகளாக என்னுடனான தொடர்பை முற்றிலுமாக நீ துண்டித்துக்கொண்ட நிலையிலும் உன் நினைவுகளை இழக்க இயலவில்லை என்னால்.
கடவுளிடம் வேண்டும் பக்தன் போல உன்னிடம் கேள்விகளை மட்டும் முன்னிறுத்தினேன் பதில்கள் கிடைக்காது என தெரிந்தும். எல்லாவற்றையும் உணர்ந்தவனாக இந்த ஆண்டு உந்தன் பிறந்த நாளுக்கு உன்னை வாழ்த்துவதில் என தீர்க்கமாய் முடிவெடுத்தேன் என் வாழ்த்தை ஏற்க விரும்பாத ஒருவருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதா? என காரணங்களை துணைக்கழித்துக்கொண்டேன்.
இதோ நீ பிறந்த அந்த நாள் வந்தது நாட்காட்டிகள் அவசியமில்லாமல் எனக்கு உணர்ததின உன் பிறந்த நாளை.
கண்டிப்பாக வாழ்த்த கூடாது என முடிவெடுத்தேன். மறந்தும் உனக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க கூடாது என அடிக்கடி எனக்கு நானே கட்டளையிட்டுக்கொண்டேன்.
நள்ளிரவு வரை உறக்கம் கலைந்தாலும் அதிகாலை அவசரமாய் எழுந்து உன் நினைவுகளை மறக்க பரபரபாக்கினேன் இந்த நாளை.
அலுவலக கடிதம் எழுத, அவசரமாய் வெள்ளைக்காகிதம் எடுத்து எழுத துவங்கினேன். காகிதத்தில் கடிதத்துக்கு பதிலாய் வேகமாக பதிந்தது உன் பிறந்தநாள் கவிதை.
என்ன செய்ய? நம் இருவருடனான விளையாட்டில் இதுவரை தோற்பது மட்டுமே என் பணியாக இருந்து வருகிறது
May 21, 2009
எவ்வாறு வெளியேறினர் தலைவர்?
May 18, 2009
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் : பத்மநாதன்
தலைவன் இருக்கிறான் : வதந்திகளை நம்பாதீர்
May 11, 2009
வாக்களியுங்கள் காங்கிரசுக்கு!
உங்கள் சகோதரரை கொல்லும் April 7, 2009
தமிழினத்துக்கு விழுந்த செருப்படி!
March 18, 2009
ஒரு எம்.பி. தொகுதிக்கு கொள்கையை அடமானம் வைத்த திருமா
March 16, 2009
என்ன ஆனது இலங்கை பிரச்னை?
March 13, 2009
கம்யூனிசம் பேசும் ‘காஞ்சிவரம்’
கம்யூனிசம் என்ன சாதித்தது? பல விவாதங்களின் போது என் நண்பர்கள் என்னிடம் வைத்த கேள்விகளில் ஒன்று. வரலாற்றை சொல்லி புரிய வைக்க முடியாது என்பதால், பெரும்பாலும் இந்த கேள்விக்கு என் பதில் மவுனமாகவே இருந்து வந்தது. இனி இந்த மவுனம் இருக்காது. அதற்கு மாறாக ‘காஞ்சிவரம் படத்தை பாருங்கள்’ என்பதாக இருக்கும்.
கம்யூனிசம் இல்லாவிடில் தொழிலாளர்கள் நிலை என்னவாகி இருக்கும்? எனும் மிகப்பெரிய கேள்விக்கு 1.30 மணி நேரம் நகரும் மன்னிக்கவும் நம்மை நகர்த்தும் இந்த படத்தில் அவ்வளவு அழகாக விளக்கியிருக்கிறார் இயக்குனர் பிரியதர்ஷன். தனது தாய்க்கும், மனைவிக்கும் பட்டு சேலை வாங்கித்தர விரும்பி அதில் தோல்வியடைந்து, மகளின் திருமணத்துக்கு எப்படியாவது பட்டு சேலை வாங்கித்தந்தாக வேண்டும் என முடிவு செய்து, அதற்காக நெசவு செய்யும் இடத்தில் இருந்து பட்டு நூலை திருடி வந்து நெசவு செய்கிறார் பிரகாஷ்ராஜ். இதற்கிடையே நோய் பாதிப்புக்குள்ளாகும் பிரகாஷ்ராஜின் மனைவி இறக்கிறார். தொடர்ந்து மகளுக்காக பட்டு சேலை தயாரிப்பு பணியில் அவர் ஈடுபடுகிறார். இதற்கிடையே, ஊருக்கு தொழிலாளர்கள் நிலையை காண வரும் கம்யூனிசவாதி ஒருவரிடம், கம்யூனிச கொள்கைகளை கேட்கும் பிரகாஷ்ராஜ், அதில் ஆர்வமாக ஈடுபட துவங்குகிறார். கம்யூனிசம் தடை செய்யப்பட்டிருந்த அந்த காலத்திலும் மறைமுகமாக இயக்கத்தை நடத்தி, நெசவாளர்களின் கோரிக்கைகளை முன்வைக்கிறார் பிரகாஷ்ராஜ் மற்றும் அவரது தோழர்கள். இதற்காக வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து நடத்துகிறார்.
இதனிடையே மகளின் திருமண தேதி நெருங்குகிறது. திருமணத்துக்குள் பட்டு சேலை தயார் செய்ய வேண்டும் என்பதால், போராட்டத்தை தன்னிச்சையாக கைவிடுகிறார் பிரகாஷ்ராஜ். தொழிலாளர்கள் பெரும்பகுதியினர் பிரகாஷ்ராஜூடன் பணிக்கு திரும்புகின்றனர். மீண்டும் பணிக்கு சென்று பட்டுநூலை திருடி சேலையை செய்ய துவங்குகிறார். ஆனால், அடுத்த முறை பட்டு நூலை திருடும்போது கையும் களவுமாக சிக்குகிறார் பிரகாஷ்ராஜ். இதன் பின்னர் சிறைக்கு செல்கிறார். இதனிடையே கிணற்றில் விழுந்து கிடை பிணமாகிறார் பிரகாஷ்ராஜின் மகள். அவரை பார்க்க 2 நாட்கள் சிறைக்காவலில் செல்லும் பிரகாஷ்ராஜ், மகளை கவனிக்க யாரும் இல்லாததால் அவருக்கு விஷம் கொடுத்து கொல்கிறார். அதுவரை தான் நெய்த பட்டு சேலையால் மகளின் உடலை மூட, ஏழை நெசவாளியின் நிறைவேறாத விருப்பத்துடன் முடிகிறது திரைப்படம்.
கம்யூனிசம் நம் நாட்டில் ஏற்படுவதற்கு முன்னர் தொழிலாளர்கள் பட்ட வேதனையை தத்ரூபமாக விளக்குகிறது படத்தின் முதல் பாதி காட்சிகள். அதற்கு மிக அழகாக பொருந்தியுள்ளது கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை சூழல். தனது முதலாளியின் மகளுக்கு பட்டு சேலையை நெயவு செய்து தந்து விட்டு, அதனை பார்க்க தனது மனைவியுடன் ஓடிச்சென்று மறைந்திருந்து பார்ப்பது; பட்டு குறைந்ததால் காட்டு மிராண்டித்தனமாக நெசவாளி ஒருவர் தாக்கப்படுவது; வீட்டில் தொழில் செய்ய அனுமதி மறுத்து அனைவரையும் ஒரே இடத்தில் தொழில் செய்ய கட்டாயப்படுத்துவது என கம்யூனிசம் தோன்றுவதற்கு முன்னர் இருந்த தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை விவரித்து விரிகிறது முதல்பாதி காட்சிகள். கம்யூனிசவாதி நாடகம் மூலம் தொழிலாளர் விரோதப்போக்கை எதிர்க்க தூண்டும் காட்சிகள் அழகு.
பட்டு சேலை நெசவு செய்வதில் மிகச்சிறந்த கைத்தறி நெசவாளியாக பிரகாஷ்ராஜ். தாய், மனைவி, மகள் என மூவருக்கும் பட்டுசேலை வாங்கித்தர விரும்பி தோற்கும் நெசவாளியாக பிரமாதப்படுத்தியிருக்கிறார். பிரகாஷ்ராஜின் மனைவியாக ஷ்ரேயா. மிக அழகான நடிப்பில் அனைவரையும் கவர்கிறார். பிரகாஷ்ராஜின் மகள், நண்பர் என அனைவரும் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர். தனது மனைவி இறப்பதற்கு முன்னால், தனது மகளுக்காக தயார் செய்யப்பட்டு வரும் பட்டு சேலையை மனைவிக்கு பிரகாஷ்ராஜ் காட்டுவதும், அதனை கண்டு புன்னகைத்தவாறு இறப்பதும் மனதை தைக்கிறது. அதேபோன்று இறுதி காட்சியில் மகளை தூக்கி கொண்டு தயார் செய்து முடிக்கப்படாத பட்டுசேலையை காட்டும் போது மனது மேலும் இறுகுகிறது.
இறுதி காட்சியில நெயவு செய்த வரை சேலையை கிழித்துக்கொண்டு வந்து மகளின் சடலத்துக்கு பிரகாஷ்ராஜ் போர்த்துவதும், அது போதாமல் இருப்பதும்; நெசவாளர்கள் தற்கொலை காட்சிகள் உள்ளிட்டவை நெசவாளர்களின் துயரத்தை வெளிப்படுத்தும் காட்சிகள். கம்யூனிச பாதையில் செல்லும் பிரகாஷ்ராஜ், சுயநலத்தால் திடீரென பாதைமாறுவதால் ஏற்படும் பிரச்னைகளும், அதன் மீதான வசனங்களும் நெகிழவைக்கின்றன. வசனங்களில் நெசவாளர்களின் அழகிய வாழ்வியலும், சோகமும் வெளிப்படுகின்றன. மிக குறைந்த நேரமே என்னை பயணிக்க வைத்த போதும், என்னை நீண்ட தூரத்துக்கு அழைத்து சென்றது காஞ்சிவரம். பொறுக்கி, போக்கிரி, திமிரு என தமிழ் பெயர்களில் படம் எடுத்து, தமிழை வாழ வைக்கும் இயக்குனர்களின் கவனத்துக்கு ... காஞ்சிவரத்தை பாருங்க.
March 9, 2009
நாஞ்சில் சம்பத் மீது தே.பா. சட்டம்
February 21, 2009
தேர்தலே ஆயுதமாக . . .
February 19, 2009
திசை மாற்றப்படும் இலங்கை பிரச்னை?
